டெல்லி அரசு எஸ்டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கூடுதல் கட்டணத்தை மானியமாக சிபிஐஇக்கு வழங்குவதாகக் கூறியுள்ளது. இதனால் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு மட்டும் ரத்து செய்வதாக சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 9ஆம் வகுப்பு படிக்கும்போதே பதிவு செய்ய வேண்டும். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 11ஆம் வகுப்பிலேயே பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்வதற்கான தேர்வுக் கட்டணத்தை சிபிஎஸ்இ மாற்றியுள்ளது. இதில் எஸ்சி., எஸ்டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணம் 24 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2 மடங்கு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். டெல்லி அரசு எஸ்டி., பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கூடுதல் கட்டணத்தை மானியமாக சிபிஐஇக்கு வழங்குவதாகக் கூறியுள்ளது. இதனால், டெல்லியில் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக் கட்டணம் 50 ரூபாயாக நீடிக்கும்.
டெல்லி அரசின் மானியம் கிடைத்ததும் மாணவர்களுக்கு கூடுதல் தொகை திரும்பிக்கொடுக்கப்படும் என சிபிஎஸ் செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.