சுமைலானி உலகத்துக்கே மிகப்பெரி அச்சுறுத்தலாக இருந்தார் என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் எஸ்பெர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மறுநாளே ஈரானும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் இரண்டு ஏவுகணைகளைச் செலுத்தியது.
இதனையடுத்து அமெரிக்கப் படைகள் விரைவில் ஈராக்கிலிருந்து வெளியேறும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சூழலில், ஈரான் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 1.30 மணிக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.